தமிழ் நாட்டில், திரை உலக ஜாம்பவான்களான மறைந்த M.K. தியாகராஜ பாகவதர் அவர்களும், கலைவானர் N.S.கிருஷ்ணன் அவர்களும் தான், அவர்கள் இருவரும் சந்தித்த ஒரு பெரிய வழக்கில், இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில், காமன்வெல்த் நாடுகளின் உள்ள உச்ச நீதி மன்றங்களுக்கெல்லாம் ,உச்சமான நீதி மன்றமாகிய "பிரீவி கவுன்சில் PRIVY COUNCIL " ல் கேஸ் அட்மிட் செய்து, நியாயம் கிடைத்ததாக, செய்திதாள்களிலும், சரித்திர புத்தகங்களின் வாயிலாகவும் நாம் அறிந்துள்ளோம். இன்னும் தமிழ் நாட்டில் பல பேர் இருக்கலாம்.. நாமும் அறியாமல் இருக்கலாம்...
இளையான்குடி எனும் சிறிய ஊரில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, உலக நாடுகள் யாவையும் சுற்றி, சிங்கப்பூரிலும் இளையான்குடியிலும் வாழ்ந்து வந்த இவர்கள், சிங்கப்பூரில் நடந்த ஒரு வழக்கை, லண்டனில் உள்ள உச்ச நீதி மன்றமான "பிரீவி கவுன்ஸிலில் PRIVY COUNCIL " அட்மிட் செய்து, வெற்றி பெற்று, தமிழக முஸ்லீம்களுக்கே சிங்கப்பூரில் ஒரு மிகப்பெரிய பெருமையைத் தேடித்தந்தவர். தமிழ் முஸ்லீம் ஆன இவர்களை, சீனர்களையும், மலாய் இஸ்லாமிய சகோதரர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது, இளையான்குடியர்களாகிய நாம் பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்..
Queen Victoria held her first Privy Council meeting on the day of her accession in 1837.
லண்டனில் உள்ள பிரீவி கௌன்ஸிலில் (PRIVY COUNCIL) இளையான்குடி வாழ் 'வாஞ்சூராரின்' வெற்றி தீர்ப்பு
க்ளிக் செய்து படிக்கவும்.தோன்றும் திரையில் படத்தில் மீண்டும் ஒரு க்ளிக் செய்து மேலும் பெரிதாக்கலாம்.
நிர்வாகம்
Home




