இது கதையல்ல! கற்பனையல்ல! சர்சைக்கு முற்றுப்புள்ளி:
இன்று நடப்பதென்ன???
ஆனால் அன்று நடந்ததென்ன? விளக்கம் கேட்டோம், பதில் வெறுப்பாக வந்தது!
மறுபடியும் தொடர்பு கொன்டு அன்பாக விளக்கம் கேட்டோம், பதில் கோபமாக வந்தது..
விட்டோமா? முயற்ச்சியை, "நல்லவர்களின் முயற்சி வீன் போவதில்லை":
எங்கள் கேள்விகளுக்கு பதில்,அருவியாக அள்ளித் தெளித்தது...
அப்படி பெறப்பட்ட பதிலை அப்படியே தருகிறோம்.. நாங்கள் என்ன கேள்வி கேட்டோம்?
இன்று நடப்பதென்ன???
ஆனால் அன்று நடந்ததென்ன? விளக்கம் கேட்டோம், பதில் வெறுப்பாக வந்தது!
மறுபடியும் தொடர்பு கொன்டு அன்பாக விளக்கம் கேட்டோம், பதில் கோபமாக வந்தது..
விட்டோமா? முயற்ச்சியை, "நல்லவர்களின் முயற்சி வீன் போவதில்லை":
எங்கள் கேள்விகளுக்கு பதில்,அருவியாக அள்ளித் தெளித்தது...
அப்படி பெறப்பட்ட பதிலை அப்படியே தருகிறோம்.. நாங்கள் என்ன கேள்வி கேட்டோம்?
யாரிடம்?
"1970 ல் தங்கள் தகப்பனார் காலேஜ் கட்டி கொடுத்த விபரங்களை, நீங்கள் ஊரிலேயே இருந்ததினால் கண்டிப்பாக, உண்மையான நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.அந்த விபரங்களை எங்கள் இணையதளத்திற்கு கூறுவீர்களா??.. இது கேள்வி...
யாரிடம்???
மர்ஹூம் ஹாஜி.வி.எம். பீர்முஹமதுவின் இளைய மகனிடம்;
அவரின் பதில் இதோ;
" நான் விபரமறிந்து நாட்களில் நான் பார்த்தது, அனேகமாக 1968.69ல் இருவர் காமராஜர் ரோட்டில், ஒருவர் தன்னுடைய கழுத்தில் 'பறை' என்ற மோளத்தை அடித்துக்கொன்டும், மற்றவர் ஒரு போஸ்டர் அடித்த தள்ளு வண்டியைத் தள்ளிக் கொன்டும், நமதூருக்கு கல்லூரி வருகிறது, நன்கொடையினைத் தாருங்கள், என்று சத்தமிட்டும் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் இருவர், ஜனாப்.ஹவுத் நையினார் அம்பலம், ஜனாப். எம்.எஸ்.அபுதாஹிர் (மொட்டச்சி) ஆவார்கள்.. பின்னாளில் அவர்கள் ஒரு நோட்டீஸை என் தாயாரிடம், எங்கள் வீட்டிற்கு வந்து, கொடுத்து இதை தகப்பனாருக்கு(சிங்கப்பூருக்கு)அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொன்டார்கள்..
1970,மார்ச் மாதம் 15ந்தாம் தேதியில்,என்னுடைய தகப்பனார், தன்னுடைய "புனித ஹஜ்ஜை" நிறைவேற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் சிங்கப்பூரிலிருந்து மெக்கா சென்றதால்,சொந்த ஊர் வந்தவுடன், வீட்டில், ஓர் பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்தவுடன், நன்னா வி.கே.இபுறாஹிம் அலி அம்பலம் அவர்கள், ஹவுத் நயினார், ஓ.ஆர்.இபுறாகிம் அலி, காதர் இபுறாஹிம், எம்.எஸ் அபுதாஹிர். இவர்களெல்லாம் கல்லூரி விசயமாய் பேச,தகப்பனாரும் வாக்கு கொடுத்து விட்டார்.
1970,மார்ச் மாதம் 15ந்தாம் தேதியில்,என்னுடைய தகப்பனார், தன்னுடைய "புனித ஹஜ்ஜை" நிறைவேற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் சிங்கப்பூரிலிருந்து மெக்கா சென்றதால்,சொந்த ஊர் வந்தவுடன், வீட்டில், ஓர் பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்தவுடன், நன்னா வி.கே.இபுறாஹிம் அலி அம்பலம் அவர்கள், ஹவுத் நயினார், ஓ.ஆர்.இபுறாகிம் அலி, காதர் இபுறாஹிம், எம்.எஸ் அபுதாஹிர். இவர்களெல்லாம் கல்லூரி விசயமாய் பேச,தகப்பனாரும் வாக்கு கொடுத்து விட்டார்.
அதன் படி இன்னும் பல பேருடைய உதவி வேன்டி,என்னுடைய தகப்பனார் ஒரு கார் பிடித்து, அதில் அவரும்,ஹவுத் நைனார், ஓ.ஆர்.இபுறாஹிம் அலி, டாக்டர்.ஏ.ஐ.முகம்மது சரீப், எம்.எஸ்.முஹமது உசேன், ஆகியோர் இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய கொடை வள்ளலைப் பார்த்து கல்லூரிக்கு நிதி வேண்ட, அவர்களோ, நிதி தருவதாகவும், கல்லூரிக்கு அவர்கள் குறிப்பிட்ட பெயரை வைக்க வேன்டியும், கேட்டுக் கொள்கின்றனர்.. இதை யோசித்து இக் குழு மனம் குழம்ப,
என்னுடைய தகப்பனார்,'"நைனாரெ, ரொம்ப யோசிக்காதீங்க, நானாச்சு, கல்லூரிக்கழக விருப்பப்படி குறித்த நேரத்தில் காலேஜ் திறந்துடுவோம்"
என்று தைரியம் கூற,
ஊர் வந்தவுடன் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு, காலேஜுக்கு உங்களுடையெ பெயரையே வைத்து விடலாம் என்றதும், இவர் மறுக்க, டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி என்றே, முதல் முடிவே இறுதியாகிறது..
ஊர் வந்தவுடன் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு, காலேஜுக்கு உங்களுடையெ பெயரையே வைத்து விடலாம் என்றதும், இவர் மறுக்க, டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி என்றே, முதல் முடிவே இறுதியாகிறது..
இக் கல்லுரி முகப்பு இடம், பரமக்குடி ரோட்டில் முகப்பு வாயில் வர வேண்டும் என்பதற்காக 19/04/70 ல் ஜனாப் அபுதாஹிரிடம், 2 ஏக்,78 செண்டு இடம் கிரையம் வாங்கி, மறு நாளே, 20/04/70 அன்று கல்லூரிக்கழகத்திற்கு (இளை சப் ரி.எண் 472/70) இனாமாக ரிஜிஸ்தர் செய்து கொடுத்ததினால்,
28/04/1970 அன்று நம் கவர்னர் மேதகு உஜ்ஜல் சிங் அவர்களால், அந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது..
எங்கள் தகப்பனார் கட்டிட வரைபடப்படி, முதன் முதல் கட்டிடத்தை தானே நின்று கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று, அதற்குன்டான வேலையை தொடங்கிவிட்டார்,
அதற்குப்பின் கட்டிட வேலைகள் மிக விறு விறுப்பாக, நடக்க,
எங்களுடைய பண்னையில், (அரியாண்டிபுர கிராம ஆட்கள்) வேலை செய்த அணைவரும் இக்கட்டிடத்துக்காக உழைத்தார்கள்
.
தினமும் என் தகப்பனார் கட்டிட இடத்திற்கு தன்னுடைய மாட்டு வண்டியில் செல்வார், இதைப் பார்த்து ஜனாப். அமீன் நயினார் ஹவுத் அவர்கள், பரமக்குடி பி.பி.டி பஸ் கம்பெனியிலிருந்து இளையான்குடியிலிருந்து கல்லூரி கட்டிடயிடம் வரை செல்ல"இலவச பஸ் பாஸ்" வாங்கி வந்து கொடுத்தார்கள்.
தினமும் என் தகப்பனார் கட்டிட இடத்திற்கு தன்னுடைய மாட்டு வண்டியில் செல்வார், இதைப் பார்த்து ஜனாப். அமீன் நயினார் ஹவுத் அவர்கள், பரமக்குடி பி.பி.டி பஸ் கம்பெனியிலிருந்து இளையான்குடியிலிருந்து கல்லூரி கட்டிடயிடம் வரை செல்ல"இலவச பஸ் பாஸ்" வாங்கி வந்து கொடுத்தார்கள்.
ஆனால், இலவசம் விரும்பாததினால் தன்னுடைய 55 வயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொன்டு(அரியாண்டிபுர தோப்பில்), கற்றபின் சைக்கிளில் சென்று கட்டிட வேலைகளை கவனித்தார். ஜனாப் அமீன் நைனார் அவர்களும் தினமும் கட்டிட இடத்திற்கு சென்று கவனித்து வருவார்கள்.
இச் சமயத்தில் என்னுடைய சகோதரர் ஒருவரும், ஊரில் இருந்ததால் அவரும் இவ்விசயத்தில் உதவியாக இருந்தார். கட்டிடம் முழுமை பெறும் போது, மேற்கூரை சிமென்ட் சீட் போடும் பொழுது (இவ் வேலையை திரு.மைக்கேல் ஆசாரி அவர்கள் செய்தார்)
முடியும் தருவாயில்,ஒரு இரவில் பயங்கரமான சூரைக்காற்று வீசியதால் கூரை சரிந்து விழ, உடணே அரியாண்டிபுரத்திலிருந்து 100 பேருக்கு மேல் அழைத்து வந்து சரி உடனடியாக செய்தது நான் கண்னால் பார்த்த விசயம்.
திட்டமிட்டபடி எல்லா வேலைகளையும் சிறப்புற செய்து முடித்து,
மே 1970ல் தகப்பனார் கரஸ்பான்டென்ட் ஆகவும் கல்லூரிக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, என் தகப்பனாரால் ஆசிரியர்கள், அலுவலகஸ்தர்கள், சிப்பந்திகள் ஆகியேருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் போடப்படுகிறது.
ஜுலை 1,1970 ல் கல்லூரி தொடக்கம்
ஜூலை 5 1970ல்,அதிகாரப்பூர்வமான, நீங்கள் பார்த்த அழைப்பிதழில் கண்டபடி , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஆரம்பம். கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், அன்று காலையிலே ஊர் வந்து. ஜனாப்.பி.என்.ஐ . அபுதாலிப் அவர்கள் வீட்டில் தங்கி, அன்று மதியம் எங்கள் வீட்டில் அவருக்கும்,மற்றைய பெரியோர்களுக்கும், விருந்து நடந்தது.அது ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி..
அன்று மாலை 4 மணிக்கு மேல் விழா ஆரம்பித்து, மேடை நிறைந்து காணப்பட்டது. அந்த மேடையில் முன்னால் ஒரு மூலையில் என் சகோதரரும் ,நானும்(அச்சமயம் நான், இ.உ.பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கிறேன்) அமர்ந்து விழாவில் பேசிய அத்தனை பேருடைய பேச்சுக்களையும், டேப் ரிக்கார்டர் மூலம் பதிவு செய்தோம்.
ஜூலை 5 1970ல்,அதிகாரப்பூர்வமான, நீங்கள் பார்த்த அழைப்பிதழில் கண்டபடி , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஆரம்பம். கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், அன்று காலையிலே ஊர் வந்து. ஜனாப்.பி.என்.ஐ . அபுதாலிப் அவர்கள் வீட்டில் தங்கி, அன்று மதியம் எங்கள் வீட்டில் அவருக்கும்,மற்றைய பெரியோர்களுக்கும், விருந்து நடந்தது.அது ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி..
அன்று மாலை 4 மணிக்கு மேல் விழா ஆரம்பித்து, மேடை நிறைந்து காணப்பட்டது. அந்த மேடையில் முன்னால் ஒரு மூலையில் என் சகோதரரும் ,நானும்(அச்சமயம் நான், இ.உ.பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கிறேன்) அமர்ந்து விழாவில் பேசிய அத்தனை பேருடைய பேச்சுக்களையும், டேப் ரிக்கார்டர் மூலம் பதிவு செய்தோம்.
அந்த நிகழ்ச்சியின் பதிவுகள் இன்றும் நாங்கள், திரும்ப, திரும்ப கேட்டு ரசிக்க முடிகிறது.
மாண்புமிகு அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களின் கோர்வையான, அடுக்கு மொழி பேச்சிலோ" நாட்டுக்கு நாடு, கண்டத்துக்கு கண்டம், ஊருக்கு ஊர் ஒர் பீர் முஹமது வேண்டும்" என்பதும்,
ஜனாப்.அமீன் நைனார் ஹவுத் அவர்கள் இயற்கையான,சாதாரன பேச்சு நடையில், பேச்சு முழுக்க என் தகப்பனாருடைய உழைப்பைப்பற்றி, வெளிப்படையான பேச்சு தான், சுவரசியமானது ஆகும்..
அதுமுதல் கல்லூரி நல்லதொரு பீடு நடை போட்டு வந்தது, 14/08/1970ல் கல்லூரி பொதுகுழு கூட்டத்தில் ஒரு சில மெம்பர்கள் நடந்து கொண்ட விதம்,என் தகப்பனார் மனதைப் புன்படுத்தி, ஜனாப்.அமீன் நைனார் ஹவுத அவர்கள் என்னுடைய தகப்பனாரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், முடியாமல் 25/08/190 ல் தன்னுடய கரஸ்பான்டென்ட் பதவியை ராஜினாமா செய்தார்கள்..
இச் சம்பவத்தை உருவாக்கிய "ஒட்டுண்ணிகளையும்" "சாருண்ணிகளையும்" நாங்கள் அறிவோம்..
இக் கல்லூரி உருவாக்க, என்னுடைய தகப்பனாருக்கு உறுதுனையாய் நின்ற மர்ஹூம்.ஜனாப். அமீன் நெயினார் ஹவுத் அம்பலம் அவர்களுக்கு என்னுடைய இதய பூர்வமான நன்றி.. இவர்,(அமீன் நெயினார் ஹவுத்) இதைத் தவிர, எனக்குத் தெரிந்த, நம் ஊருக்கு, செய்த நல்லவைகளை, பிறகு தெரிவிக்கிறேன்..
இவையாவும் நம் ஊரில்,அப்பொழுது இருந்த, இப்பவும் இருக்கின்ற நிறைய பேர் மிக,மிக நன்றாக அறிவார்கள்.. ஆனால் அதில் சிலர் வாய்மூடி மவுனியாகி விட்டார்கள்.. என்ன காரனமோ?!
"யாம் அறியேன் பராபரமே".
என்னுடைய தகப்பனாருக்குப்பின், எங்கள் குடும்பத்திலிருந்து யாருமே கல்லூரி கழகத்தில் அங்கத்தினர் கூட இல்லை.. இதில் பலருக்கு திருப்தி..
**************************
எங்கள் இனயதள சார்பில்,தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நண்றி..
நிர்வாகம்
என்னுடைய தகப்பனாருக்குப்பின், எங்கள் குடும்பத்திலிருந்து யாருமே கல்லூரி கழகத்தில் அங்கத்தினர் கூட இல்லை.. இதில் பலருக்கு திருப்தி..
**************************
எங்கள் இனயதள சார்பில்,தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நண்றி..
நிர்வாகம்
Home
No comments:
Post a Comment