Wednesday, March 24, 2010

ஜனாப் K.M. அக்பர் அலியின் அறிவிப்பு- 17 வயதுள்ள K.M.A. முஹமது இர்ஃபான்

advt.

டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் முதல்வர் (அதிகாரத்தில் இருக்கும் நிர்வாகிகளின் உத்தரவுபடி ) ,

ஜனாப். K.M. அக்பர் அலி அவர்கள் மீது குற்றச்சாட்டுகளுடன் U.C.G க்கு அனுப்பிய பதிலால்

மிகவும் பாதிக்கப்பட்ட அக்பர் அலி மற்றும் அவர் உறவினர்களின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

தொடர் நடவடிக்கைகள் கீழே காண்க:

ஜனாப் K.M. அக்பர் அலியின் உடன் பிறந்த தம்பி மர்ஹூம் ஜனாப் K.M. அலி உசேன் அவர்களின் மகன் சுமார் 17 வயதுள்ள K.M.A. முஹமது இர்ஃபான் ஆகிய இவர்,

பெற்ற தாயையும், தந்தையையும் இழந்து பெரிய தகப்பனார் K.M. அக்பர் அலியின் ஆதரவில் வளர்ந்தும், படித்துக்கொண்டும் வரும் இந்த இளம் “கன்று”, விளையாட்டினையும், படிப்பையும் சந்தோசத்தையும் மட்டுமே அனுபவிக்க வேண்டிய வயதில், தன் தந்தையைப்பற்றியும், தந்தையின் மரணம் பற்றியும் சில “கண்ணியவான்களால்” அவதூறாக எழுதியதைப்படிக்கும்போது அந்த “பிஞ்சு மணம்” எவ்வளவு பாடுபட்டிருக்கும்???

இதை உணர முடிகிறதா?



இளையான்குடி வாசகர்களே!



இந்த "கண்ணியவான்கள்" உண‌ருவார்களா?

இந்த வயதில் இவரால் என்ன செய்ய முடியும்?

இதோ எழுதுகிறார்.. யாருக்கு? தன் சொந்த ஜமாத்துக்கு, மேலப்பள்ளிவாசல் ஜமாத்தார்களின் தயவு வேண்டி, நியாயம் கிடைக்க, பள்ளியின் மதிப்பிற்குரிய ட்ரஸ்டி அவர்களுக்கு எழுதும் கண்ணீர் காவியம்.

CLICK AND READ



மர்ஹூம் ஜனாப் K.M. அலி உசேன் அவர்களின் மகன் சுமார் 17 வயதுள்ள முஹமது இர்ஃபான், டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் முதல்வருக்கு, தன் தந்தையின் மரணம் பற்றி அவதூறாகவும், பொய்யான தகவல் எழுதியதற்க்கு விளக்கம் கேட்டும், தன் சுய கவுரவத்தைப் பெரிதும் பாதிப்பதால் அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் எழுதிய முன் அறிவிப்பு நோட்டீஸ்.

CLICK AND READ




டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் முதல்வர் (அதிகாரத்தில் இருக்கும் நிர்வாகிகளின் உத்தரவுபடி) ஜனாப்.K.M.அக்பர் அலி அவர்கள் மீது குற்றச்சாட்டுகளுடன் U.C.G க்கு அனுப்பிய பதிலில்

“ஒன்றரை வருடத்திற்கு முன்னால் K.M. அக்பர் அலியின் தம்பி மர்ஹூம் ஜனாப் K.M. அலி உசேன், ஒரு விடாக்குடியர், தன்னுடைய இருதய கோளாறுகளுக்கு உள்ளூர் ஹோமியோபதி டாக்டரிடம் தனக்கு நெஞ்சு வலி வரும் போதெல்லாம் மருத்துவம் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் கடுமையான நெஞ்சு வலியுடன் ஹோமியோபதி டாக்டரிடம் சென்ற பொழுது அவருடைய கடுமையான நிலையை கண்ட ஹோமியோபதி டாக்டர் உடனடியாக இதய சிகிச்சை டாக்டரிடம் செல்ல சொன்னார்.



K.M. அக்பர் அலியின் தம்பி மர்ஹூம் ஜனாப் K.M. அலி உசேன் ஹோமியோபதி டாக்டரின் வீட்டை விட்டு வெளியாகும் தருணத்தில் அக்கணமே மயங்கி விழுந்து இறந்தார்.



ஊருக்கு வந்த அக்பர் அலி, தன் தம்பி K.M. அலி உசேன் ஹோமியோபதி டாக்டரின் வீட்டின் முன்பாக உயிர் நீத்ததை அறிந்து,

தவறான மருந்துகளை கொண்டு என் தம்பிக்கு சிகிச்சை அளித்து என் தம்பி K.M. அலி உசேன் மரணமடைய செய்ததற்காக எனக்கு ரூபாய் ஒரு லட்சம் தர வேண்டும்

இல்லாவிட்டால் போலீசில் புகார் செய்வேன் என ஹோமியோபதி டாக்டரை மிரட்டினார்.

தன்னுடைய வயிற்று பிழைப்புக்கு ஆபத்து நேர்ந்து விடும் என உணர்ந்த ஹோமியோபதி டாக்டர் ரூபாய் 20 ஆயிரத்தை பிரிந்ததாக தெரிகிறது.” என‌ எழுத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் கீழே வரும் இந்த விளக்க கடிதம் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் முதல்வர் (அதிகாரத்தில் இருக்கும் நிர்வாகிகளின் உத்தரவுபடி) ஜனாப்.K.M.அக்பர் அலி அவர்கள் மீது குற்றச்சாட்டுகளுடன் U.C.G க்கு அனுப்பிய பதிலில் சொல்லப்பட்ட "ஒரு ஹோமியோபதி வைத்தியர்" அவர்கள்

மர்ஹூம் ஜனாப் K.M. அலி உசேன் அவர்களின் மரணம் பற்றி ஜனாப் K.M. அக்பர் அலி தன்னிடம் மிரட்டி பணம் கேட்டதாக, தான் கொடுத்ததாக கூறப்பட்டிருப்பதை பொய் என‌ மறுத்து விளக்க அறிக்கை அளிக்கிறார்

CLICK AND READ


advt

No comments: